×

மதுரவாயலில் பரபரப்பு வங்கி மேலாளர் தற்கொலை: போலீசார் விசாரணை

பூந்தமல்லி: அசாம் மாநிலத்தை சேர்ந்த கிஷோர் பிரசாத் தாஸ் (45). இவர், சென்னை மதுரவாயல் அருகே ஆலப்பாக்கத்தில் ஒரு தனியார் வங்கியில் உதவி மேலாளராக வேலைபார்த்து வந்துள்ளார். இவர் பணி நிமித்தம் காரணமாக ஆலப்பாக்கம், நடேசன் நகரில் ஒரு தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் வாடகை வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளார். இவரது குடும்பத்தினர் அசாம் மாநிலத்தில் வசிப்பதாக கூறப்படுகிறது. நேற்று முன்தினம் மாலை கடும் துர்நாற்றம் வீசியது. தகவலறிந்த மதுரவாயல் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர், உள்பக்கமாக பூட்டியிருந்த வீட்டுக் கதவை உடைத்துக்கொண்டு உள்ளே சென்று பார்த்தனர்.

அப்போது, கிஷோர் பிரசாத் தாஸ் அழுகிய நிலையில் சடலமாக கிடப்பதை பார்த்து போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் சடலத்தை கைப்பற்றி, சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். புகாரின்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். முதல்கட்ட விசாரணையில், அவர் இறந்து 2 அல்லது 3 நாட்களுக்கு மேல் இருக்கும் என தெரியவந்தது. இதுகுறித்து அசாம் மாநிலத்தில் வசிக்கும் அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மேலும், அப்பகுதி சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து, தனியார் வங்கி உதவி மேலாளர் உடல்நலக்குறைவால் இறந்து போனாரா அல்லது தற்கொலை செய்து கொண்டாரா அல்லது என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

The post மதுரவாயலில் பரபரப்பு வங்கி மேலாளர் தற்கொலை: போலீசார் விசாரணை appeared first on Dinakaran.

Tags : Maduravala ,Poondamalli ,Kishor Prasad Das ,Assam State ,Alapakam ,Maduravayal, Chennai ,Dinakaran ,
× RELATED முதல்வருக்கு ஓ.பன்னீர்செல்வம்...